நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்காக மக்கள் மன்றம் நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றம் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தில் முக்கிய பங்காற்றும் மகளிர் அணி நபர்கள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவிற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடக தேர்தல் முடிவு, குமாரசாமி பதவியேற்பு, காவிரி விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவை அனைத்திற்கும் பதிலளித்த ரஜினிகாந்த், “கர்நாடகத்தில்குமாரசாமிக்குகிடைத்தவெற்றிஜனநாயகத்திற்குக்கிடைத்தவெற்றி. எடியூரப்பாவிற்குபெரும்பான்மைநிரூபிக்ககவர்னர் 15 நாள்கெடுஅளித்ததுதவறு. ஆனால்இந்தவிவகாரத்தில்உச்சநீதிமன்றம்நியாயமானதீர்ப்பைவழங்கியுள்ளது.” என்றார்.
மேலும் காவிரி விவகாரத்தில் கமல் ஹாசன் அழைப்பு விடுத்தும் தான் பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு, “அனைத்துக்கட்சிகூட்டத்திற்குஅவர்அழைப்புவிடுத்தார்ஆனால்நாங்கள்இன்னும்கட்சியேதுவங்கவில்லைஎனவேதான்பங்கேற்கமுடியவில்லை. ஆனால்எதிர்காலத்தில்அழைப்புகள்வரும்போதுநிச்சயம்பங்கேற்போம். காவிரிபிரச்சனையில்கமல்ஹாசனின்முயற்சிவெற்றிபெறவாழ்த்துகிறேன்.” என்றும் கூறினார்.
இறுதியாகக் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு மற்றும் மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் குறித்துக் கேட்டதற்கு, “காவிரிவழக்கில்உச்சநீதிமன்றம்தீர்ப்பைமத்தியஅரசுநிறைவேற்றியேஆகவேண்டும். அதுஅவர்களின்கடமை. மேலும்காவிரிவிவகாரத்தில்அதிகாரம்ஆணையத்திடம்இருப்பதுநல்லதுஎன்றேநான்நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் முடிவுல் விரைவில் கட்சி துவங்கப்படும் என்றும், இனி வரும் காலத்தில் அனைத்தையும் சந்திக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.