வாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை டெலிட் செய்யும் வசதி விரைவில் 1 நாள் வரையில் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. யூசர்களை கவரும் வகையில், இந்த செயலில் இடம்பெறும் புதிய புதிய அப்டேட்டுகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ் அப்பில், தவறாக அனுப்படும் மெசேஜ்களை இருவருக்கும் டெலிட் செய்து வசதி (Delete for everyone) புழகத்திற்கு வந்தது. யூசர்களை இந்த அப்டேட் வெகு அளவில் கவர்ந்தது. இந்த அப்டேட் முதன் முதலாக அறிமுகமான போது, மெசேஜ் அனுப்பிய 6 நிமிடங்களுக்கு மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு, இந்த வசதி 6 நிமிடம் கால அவகாசத்தில் இருந்து, 1 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 1 மணி நேர வசதி தற்போது 1 நாளாக நீடிக்கப்பட இருப்பது புதிய தகல்வல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
இதற்கான சோதனை ஓட்டம் தற்போது பீட்டா வெர்ஷனில் நடைப்பெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், இதுக் குறித்து வாட்ஸ் அப்பில் எந்த வித தவல்களும் உறுதி செய்யபடவில்லை.
You must be logged in to post a comment.